http://mugamoodi.blogspot.com/2006/07/blog-post_27.html
சரியோ பிழையோ ..நீங்கள் சில விடயங்கள் சிறப்பாக விவாடிப்பதாக நான் கருதுவதாலும், இங்கு பொருட்பிழை இருப்பதாலும் சுட்டிகாட்டவேண்டும் போல இருந்தது. அதனால் மட்டும்....
[இங்கு பல விடயங்கள் பொதுமைப்படுத்தப்பட்டதால் எனக்கு அப்படி ஒரு புரிதலோ தெரியவில்லை!]
/**தற்கொலைத் தாக்குதல் என்பது தீவிரவாதிகளைப் பொறுத்த வரை நேரடியான போரை விட பல்வேறு விதங்களில் இலாபகரமானது... குறைந்த வீரர்களைக் கொண்டு நிறைய சேதம் ஏற்படுத்தலாம். ராணுவத்தில் போர்ப் பயிற்சி பெற்ற வீரர்களை நேரடியாகப் போரிட்டு கொல்வதைக் காட்டிலும் ஆயுதம் தரிக்காத அப்பாவி மக்களைக் கொல்வது சுலபமானது. எல்லையில் நடக்கும் போரை விட நாட்டுக்குள் மக்கள் மத்தியில் நடத்தப்படும் 'போர்' நிறைய சேதத்தையும் சைக்கலாஜிக்கல் முறையில் அதிக பயத்தையும் உருவாக்க வல்லது. தற்கொலை வீரர் என்பவர் ஒன்றும் சீருடை எல்லாம் அணிந்து தனித்துத் தெரிய மாட்டார். மக்களோடு மக்களாக ஒரு கூட்டத்தில் ஊடுருவியிருக்கும் தற்கொலை வீரருக்கும் மற்றவருக்கும் வித்தியாசம் கண்டுகொள்வது கடினம் என்பதால் இதனைத் தடுப்பதும் நேருக்கு நேர் போர் என்பதை விட சிக்கலாகவே இருக்கிறது.
**/
** அமேரிக்கா இராக் மீதான ஆரம்பத்தாக்குதலில் விமானத்தாக்குதல் நடத்தியது நாட்டு எல்லையில் போர் நடத்தவா?
** போர் / எதிரி என்று வந்துவிட்டால் தாக்குதல் எப்படியும் இருக்காலாம். (என்று போரியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். என்ன செய்வது? ஆதாரம் இல்லை ;)
** விடுதலைபுலிகளை பொறுத்தவரை பெரும்பாலும் ராணுவ இலக்குகளே தற்கொலைத் தாக்குதல்களுக்கு உள்ளாகி இருக்கிறது. (பெரும்பாலும் என்று escape clause இருப்பது எவ்வளவு வசதி)
**
2. மூளைச்சலவையால் சாத்தியமானவை பல இருக்கிறது. நாட்டுப்பற்று/ இனப்பற்று .etc.
இந்தியாவுக்கு 2012 ஒலிம்பிக்ஸ்ல் தங்கம் கிடைக்கப்போவது ஒருவகை மூளைச்சலவையால் [என்று மானிடவியலாளர் கருதுகிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். ]
[He knows that if he runs people will be happy. he does not know the impact it has on his body - telegraph 23/07/2006]
3. தற்கொலைப்படை என்ற வலிமையான ஆயுதம் அளவுக்கு மிக அதிகமாக பவிக்கப்படுவதாக ( ஆயுதம் வைத்திருப்பவர்களால்) - [ஆயுத விற்பனர் சொல்கிறார்கள் என்று சொல்ல விருப்பம் தான். என்ன செய்வது? ஆதாரம் இல்லை ;) ] .
4. செயின் ரியாக்சன் - [தமிழில் தலைப்பு கொடுத்தால் என்ன? ] - செயின் ரியாக்சனின் ஆரம்பம் என்ன?
க்ரீன் வாங்கிய அடி அமெரிக்கவில் ஒரு சமூக/ குடும்பப் பிரச்சனையால். அவனால் பாதிக்கப்பட்டது எங்கோ இருந்த அகமது. உலகம் இயங்குவது இப்படிப்பட்ட chain reaction ஆல் தான் (என்று ... ) . தற்கொலை தாக்குதலுக்கும் chain reaction என்ன special தொடர்பு?
5. /**ஏதோ ஒரு குண்டில் சிதறடிக்கப்பட்ட நம் வாழ்க்கை நமக்கு தந்த பாதிப்பின் வலிக்குப் பதிலடியாக தாம் ஒரு குண்டை வெடிக்க, அந்த குண்டு சிதறடிக்கும் பல நூறு பேரின் வலி இன்னும் ஒரு நூறு குண்டுகளை நாடி... என்று ஒரு செயின் ரியாக்சனுக்கு அடி போடுகிறோம் என்பது அவர்கள் சிதறும் வரை அவர்களுக்கு தோன்றாமலேயே போவதுதான் விதி. **/
9/11 தற்கொலை தாக்குதலின் பின் அமேரிக்காவில் இருந்து எத்தனை தற்கொலை தாக்குதல் உருவானது?
இல்லை ... தற்கொலை தாக்குதலின் chain reaction வேறுவகையாய் இருக்குமென்றால், தற்கொலையை தூண்டியது எது?
6. தற்கொலைத்தாக்குதல்க்காரர் தம்மை பாதிக்கப்பட்டவர்களுடன் அடையாளப்படுத்துவதால்தான் தான் அவர்களால் "அதை" செய்ய முடிகிறது. அது கலாச்சாரத்துடனும் இணைந்தது (என்று ... ) . UK ல் இருந் து இஸ்ரேல் சென்று தாக்கியவர்களும்/ லண்டன் தாக்குதல் நடத்தியவர்களும் பாக்கிஸ்தானிய மூலம் கொண்டவர்கள்.
7. ஏனோ சியாச்சின் ஞாபகம் வருகிறது.
தாக்குதலின் பின் தப்புவதற்கு 37% க்கு குறைவாக வா́ய்ப்பு இருந்தால் மட்டும் அது தற்கொலை தாக்குதலா?
8. கொலைகள் செய்வது Vs எனது உயிர் உட்பட கொலைகள் செய்வது - உயிர்வலியை எல்லோருக்கு இருக்கும்.
9. இதை எழுதிக்கொண்டிருக்கும் போது வெளியே மழை. மெதுவாக காற்றும் வீசுகிறது. நான் இங்கு எழுதுவதை எனது சூழல் நிர்ணயிக்கிறது. மழை நீருக்கு பதில் குண்டு விழுந்தால் நான் என்ன செய்வேன்? [தற்கொலைத்தாக்குதல் செய்யமாட்டேன்!]
பிகு:
எனக்கு முகம் இல்லாததில் ஒரு வசதி. யாரும் என்னை கேள்விகளை கேட்டால் பதில் சொல்ல தேவையில்லை. கேள்விகளை கேட்டுக்கொண்டே இருக்கலாம்.
-பிடி
Tuesday, August 01, 2006
Subscribe to:
Posts (Atom)